இலங்கை தொடர்பான கூற்றுக்கு இந்தியா எதிர்ப்பு

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வெளியிட்டுள்ள கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட அமர்வுகளின் போது உறுப்பு நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அதன் ஆணாயளர் நவனீதம்பிள்ளை உதாசீனம் செய்துள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து அதன் தலைவரே விமர்சனம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகத்தின் சுயாதீனத் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளதாக பேரவையின் இந்தியாவிற்கான பிரதிநிதி கோபிநாதன் அச்சுமுகலனால்கரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment